Total Pageviews

Thursday, 26 December 2013

அத்தியாயம் - ஒன்பது - "கோபவெங் கொடியனும்"

அத்தியாயம் - ஒன்பது


மலர்: "கோபவெங் கொடியனும்" என்ற சொற்றொடர் எதனைக் குறிக்கிறது ?


தமிழாசிரியர்: "கோபம் என்னும் கொடியவனும்" என்று அதனை பொருள் கொள்ளவேண்டும்.

அறியாள்: விளக்கமாக கூறவும் ?
 
தமிழாசிரியர்: "கோபம்" என்னும் குண இயல்பு மனிதர்களுக்கு கேட்டினை விளைவிப்பதால் அதனை "கோபவெங் கொடியனும்" என்று வள்ளலார் கூறுகிறார்.


எழில்: கோபம் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்ற சிந்தனை மிகவும் பழமையானது, எதார்த்தமானது, அனைவரும் ஏற்பது. ஆகையினால், நானும் ஏற்கிறேன். சரி கேடு என்று சொல்கிறீர்களே, அந்த கேடானது நமது உள்ளத்துக்கா ? அல்லது நமது உடலுக்கா ?, நம் எதிரே நிற்பவரின் உள்ளத்துக்கா ? அல்லது உடலுக்கா ? என்ற சில கிளைக் கேள்விகளை முன்வைத்தால் எப்படி பதில் கூறுவீர்கள் ?

டாக்டர்: நீங்கள் கூறிய நான்கு நிலைகளுக்குமே கேடுதான். அதிநவீன மருத்துவத்தின் ஆழத்தில் சென்று பல திசைகளில் பயணித்து அறிவியல் செய்திகளை இவ்விடத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

அறியாள் : அதுதான் தேவை, காத்திருக்கிறோம்.

டாக்டர்: கோபமானது, கோபம் கொள்பவரின் உள்ளத்தின் பகுதிகளை "Parts of the Psyche" கெடுக்கும். மேலும் கோபம் கொள்பவரின் உடலின் உடல் இயக்க செயல்பாடுகளையும்
 கெடுக்கும் "Somatic Derangements"

அரியாள்: கோபம் உடலின் செயல்பாட்டினை எந்த மருத்துவ அடிப்படையில் கெடுக்கும் ?

தமிழாசிரியர்: இந்த கேள்வியை வள்ளலாரின் சொல்கொண்டே விளக்க முடியும்.




அறியாள்: எந்த சொல் அது ?

தமிழாசிரியர்: வள்ளலார் எழுதிய அந்த சொற்றொடரை மீண்டும் ஒரு முறை காண்க,  "கோபவெங் கொடியனும்" , கவனமாக "வெங்" என்று பிரித்து காண்க. பொறி அறிவு சிறிது வளர்ந்தவுடன் மனிதர்கள் கோபம் கொள்ளும் குணத்தை பெறுகிறார்கள். கோபமானது உடலை வெதும்பி, முகத்தை சிவப்பித்து , செவ்விய சொற்களை வெளிப்படுத்தி கொடுமை செய்யும் என்று தனது உரையில் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை கூறுகிறார்.

எழில்:
 இன்னும் நீங்கள்  "வெங்" என்ற சொல்லின் ஆழத்தை விளக்கவில்லை.

டாக்டர்: கோபமானது மனித உடலில் ஏற்படுத்தும் அனைத்து மாற்றங்களுமே முக்கியமாக இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டுள்ளன.



மலர்: விளக்கமாக கூறவும் ....

டாக்டர்: மனிதர்கள் கொபம்கொல்வது போன்ற உணர்ச்சிவயப்பட்ட நிலைகளை அடையும் பொழுது அது அவர்களின் உடல் நலன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல் அறிஞர்களிடையே வெகுகாலமாக நீடித்திருக்கும் உண்மையாகும்.




மேற்க்கத்திய அறிவியல் வரலாற்றின்படி, 1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வே என்ற மேல்நாட்டு ஆய்வாளர் மனதில் ஏற்படும் நிகழ்வுகள் இதயத்தின் செயல்பாட்டினை பாதிக்கும் என்று கருத்து கூறினார். வெறுமனே ஒரு கருத்தியலாக அவரது கருத்தை ஏற்ற நிலையிலும் ஆய்வுகளின் மூலமாக அதனை ஏற்கவும் விடுக்கவும் அறிவியல் உலகத்தால் முடியவில்லை. ஆனால் இன்று மிகவும் தெளிவாக உணர்வு நிலைகள் இதயத்தின் செயல்பாட்டினை பாதிக்கும் என்று பற்பல ஆய்வுகள் மூலமாக நிரூபித்துள்ளார்கள்.





எழில்: எவ்வகயினில் கோபமும் இதயத்தின் செயல்பாடுகளும் இணைந்துள்ளன ?

டாக்டர்: ஒன்றல்ல, பல நிலைகளில் இந்த இணைப்பு அமைந்துள்ளது

மலர்: இவற்றை எங்களுக்கு விலக்க முடியுமா
 ?

டாக்டர்: எதிர்மறையான உணர்ச்சிகள் (Negative Emotions) ஒன்றுடன் ஒன்று திரளாக இணையும் நிலையில் பேத்தோபிஸியலாஜிகல் (Pathophysiological) உளவியல் சார்ந்த உடல் இயக்க இயல் மாற்றங்களை மனித உடலில் ஏற்படுத்தும்.

மலர்: எப்படி இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன ?

டாக்டர்: நரம்பு இயக்குநீர் முறைமைகள் (Neurohormonal) மற்றும்
 அவற்றின் இயங்கு முறைகளில், அதாவது அவற்றின் இயங்கும் விசைகளில் (Mechanisms) நிலையான மாற்றங்களை (steady activation) மீண்டும் மீண்டும் செயல்படுத்துவதன் மூலமாக அவற்றின் வழியே உடலினுள் நிகழும் நிகழ்வுகள் மாற்றமடைகின்றன.



Saturday, 21 December 2013

அத்தியாயம் எட்டு - வள்ளலார் ஒரு சித்த மருத்துவர்.

அத்தியாயம் எட்டு - வள்ளலார் ஒரு சித்த மருத்துவர்.



மருத்துவர்: கோடி உயிர்களை ஒரு உயிரில் இருந்து (ஆதம்) படைக்கும் திரன் உடைய இறைவனால் எல்லாம் முடியும்.

அறியாள்: பெண் சிசுவின் கருவகத்தில் உண்மையில் நடப்பது என்ன சற்று விளக்க முடியுமா?

டாக்டர்: பெண் சிசுவின் கருவகத்தில் இரண்டு முதல் ஏழு மாதம் வரை அதிக அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் உருவாகும், உயிரணுக்கள் பிளவுபட்டு எண்ணிக்கையில் பல்கிப்பெருகும். அவை ஒடுக்கற்பிரிவு (meiosis) எனப்படும் ஒரு வகையான உயிரணு பிளவு நிலைக்குள் நுழையும்.

அறியாள்: நுழையும் என்றல் என்ன பொருள் ?



டாக்டர்: பன்னிரெண்டாவது வாரத்தில் சில கருமுட்டைகள் மட்டுமே இந்த கருமுட்டைகள் செயல்பாட்டினுள் நுழையும், மெதுவாக அனைத்தும் நுழைந்து ஐந்தாவது  மாதத்தில் அனைத்து கருமுட்டைகளும் இந்த செயல்பாட்டினுள் நுழையும் ஆனால், அவை தங்களது உடலியக்க செயல்பாட்டினை உடனே முடிக்காமல் ஒருவகையான செயலற்ற நிலைக்கு சென்றுவிடும். 

அறியாள்: இந்த செயலாற்ற நிலை எவ்வாறு ஏற்படுகிறது ?



டாக்டர்: ஆங்கிலத்தில் Oocyte Maturation Inhibiting Peptide என்று அழைக்கப்படும் ஒரு வகையான புரதம் இதற்கு காரணமாகும்.              

அறியாள்: இந்த செயலாற்ற நிலையில் அவை எவ்வளவு காலம் இருக்கும் ?


டாக்டர்: அந்த சிசு, பிறந்து வளர்ந்து பூப்படையும் வயதை அடையும் வரை அவை  செயலாற்ற நிலையில் அமைதியாக இருக்கும்.

அறியாள்: இத்தனை காலம் இந்த உறைநிலை நீடிக்குமா, ஆச்சர்யமாக உள்ளதே !!!

மலர்: இவ்வாறு செயலாற்ற நிலையில் எத்தனை கருமுட்டைகள் இருக்கும்?

டாக்டர்: இருபது வார பெண் சிசுவின் கருவகத்தில் அறுபது முதல் எழுபது லட்சமாக இருக்கும் எண்ணிக்கை, அந்த பெண் சிசு பிறக்கும் பொழுது இரண்டு முதல் நான்கு லட்சமாக குறையும்.

வளர்ந்து பருவமடையும் வயதில் அது நாற்பது ஆயிரமாக குறையும், வொவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் பொழுதும் சில என்ற எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலகட்டத்தில் பூப்பூ காலம் (Menarche) முதல் மாதவிடாய்வற்றுதல் (மெனோபாஸ்)  (Menopause) வரை நானூறு முதல் ஐந்நூறு கருமுட்டைகள் வளர்ந்து வெளியாகும்.



தமிழாசிரியர்: இறைவன் மிகப்பெரிய படைப்பாளி, அவனால் எப்படியான எண்ணிக்கையையும் படைக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

மலர்: காம வுட்  பகைவனுற் அர்த்தமுள்ள சொற்றொடர்.

டாக்டர்: வள்ளலார் சித்த மருத்துவம் பயின்ற மருத்துவர்.

எழில் : உணர முடிகிறது. உணர்ந்தவரை உணர முடிகிறது.   

  

Friday, 13 December 2013

யார் செம்மல் ?

யார்  செம்மல் ? 



செம்மல் 

ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியர் 




அத்தியாயம் - ஏழு - “காம வுட் பகைவனுற்” - சிற்பி அவன், சொற்பமே நாம்.

அத்தியாயம் - ஏழு 


தமிழறிஞர்: சரி, ஆறாவது பாடலை இனி காண்போம்.

மருத்துவர்: காம வுட்  பகைவனுற் என்று ஒரு சொற்றொடர் ஆறாவது பாடலில் வருகிறது.

ஜெயஸ்ரீ: இதன் பொருள் என்ன ?

மருத்துவர்: காமம் சார்ந்த உடல் இயக்க இயல் செயல்பாடுகளும் தாக்கங்களும் பருவம் அடைந்த காலத்திற்கு பின்னரே தனது தாக்கத்தை மனித உடலில் செலுத்தும் என்பது தவறு.  

காமம் சார்ந்த செயல்பாடுகள் மனித உடல் வளர வளர உடன் சேர்ந்து வளர்ந்து; முதிர்ந்த நிலைப்பாட்டை நிர்ணயிக்கப்பட்ட வயதை நாம் அடையும் நிலையில் அடைகின்றன.

நமக்குள் நிகழும் பல நிகழ்வுகள் நமது அறிவிற்கு எட்டாத நிலையில்,ஆழத்தில் நிகழ்கின்றன.

காரணம், நமது உடலின் முழு செயல்பாடுகளையும் நம்மால் உணர முடியாது

நாமாக இருப்பினும் நம்மை நாம் இயக்குவதில்லை.

நமது உடல் இறைவன் படைத்தது, அதில் நிகழும் நிகழ்வுகள் அவன் வடிவமைத்தவை.

சிற்பி அவன், சொற்பமே  நாம்.

ஜெயஸ்ரீ: வுட்  பகை”, மேலும் விலக்குக.
           
மருத்துவர்: அறிவியலின் ஆழத்தில் சென்று காணவேண்டிய ஒரு உளவியல் சார்ந்த உடல் இயக்க இயல் (Psychophysiology) கோட்பாடு இது. 


காமம் சார்ந்த உடல் இயக்க இயல் செயல்பாடுகள் கருவிலே தோன்றிக் குழவிப் பருவத்தே முளைத்து இளமை வளர வளர்ந்து பிற உயிர்களை படைக்கும் காளைப் பருவத்தில் முகிழ்ந்து மலரும் இயல்பிற்றாதலின் அதனை காம வுட் பகைவன்என்று கூறுகிறார் வள்ளலார் (உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை உரை)   

மலர்:மேலும் விளக்கவும்.

மருத்துவர்: காமம் சார்ந்த உடல் இயக்க இயல் செயல்பாடுகளும் தாக்கங்களும் பருவம் அடைந்த காலத்திற்கு பின்னர் மட்டுமே தங்களது தாக்கத்தை மனித உடலில் செலுத்தும் என்பது பொதுவாக மக்கள் ஏற்கும் எதிர்பார்ப்பு. 

ஆனால், நவீன மரபியல் ஆய்வுகள்  வேறாக உண்மையை இயம்புகின்றன.

ஒரு கரு தனது தாயின் கருவறையில் உள்ள நிலையிலேயே (Inside Uterus) (Intrauterine), அது பெண் சிசுவாக இருக்கும் நிலையில் அதன் உடலில் உள்ள கருவகம் (Ovary) என்னும் பகுதியில் சுமார் பத்து லட்சம் கரு முட்டைகளின் உருவாக்கத்தின் துவக்கம் துவங்கிவிடும்.




ஆனால்,இன்றும் அறிவியல் முழுவதும் கண்டறியாத ஒரு உயிர்வேதியியல் பொருள் (biochemical substance) கருமுட்டைகளை சூழ்ந்துள்ள இடத்தில் சுரக்கிறது.

கருமுட்டைகளின் வளர்ச்சியை அப்படியே அது முடக்கி (Freeze) விடுகிறது.

இதனை CSF (cytostatic factor) என்று அழைப்பர், மேலும் MPF (maturation promoting factor) என்ற ஒன்றும் உள்ளது.


மலர்: சற்று பொறுங்கள்?
நீங்கள் சொல்வது முழுவதும் விளங்கவில்லை.
ஒரு பெண் சிசு தனது தாயின் கருவறையிலுள்ள நிலையிலேயே பத்து லட்சம் உயிர்களை உருவாக்கும் அடிப்படைக்கூறு அதனுள் உள்ளதா ?


மருத்துவர்: ஆம் உள்ளது.
ஆனால், பல்வேறு உயிரியல் நிகழ்வுகள் ஒரு கோர்வையாக பணிசெய்து, வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உயிர்களை வெளிப்படையாக உருவாக்கும் திறனை மனித இனத்திற்கு கொடுத்துள்ளது.


அறியாள்: ஒரு உயிரினுள் பல லட்சம் உயிர்களின் மூலம் எவ்வாறு இருக்க  முடியும் ?



மருத்துவர்: கோடி உயிர்களை ஒரு உயிரில் இருந்து (ஆதம்) படைக்கும் திரன் உடைய இறைவனால் எல்லாம் முடியும். 



Thursday, 12 December 2013

அத்தியாயம் - 6 - சுயம் என்பதை மறுத்த மறந்த மக்கள்

அத்தியாயம் - 6


இந்த அத்தியாயத்தில் இருந்து ஜெயஸ்ரீ என்றொரு புதிய கதாப்பாத்திரம் கதையில் இணைக்கப்படுகிறது

யார் இந்த ஜெயஸ்ரீ ?
இவர் ஒரு மருத்துவ மாணவி, MBBS பயிலும் மருத்துவ மாணவியாக இவர் கதையில் பயணிப்பார்

ஜெயஸ்ரீ: பொதுவாக ஆன்மீக சிந்தனைகள் அமைதியை உலகில் தோற்றுவிக்க வேண்டிய பணியினை செய்ய வேண்டும்.

இதுதான் பொதுவான எதிர்பார்ப்பு

ஆனால் மாறாக, அமைதியை உலக மதங்களில் தேட வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளதே இந்த நிலை ஏன் ?

மருத்துவர்: ஆழமாக சென்று விடை காணவேண்டிய கேள்வி இது.

தமிழறிஞர்: செல்வோம், வெல்வோமா ?


மருத்துவர்: ஆன்மீகத்தை ஒரு கடலின் உதாரணத்தை வைத்து விளக்க முடியும்.

ஆன்மிகம் என்பது ஒரு பெரும் கடலைப்  போன்றது. 

ஆன்மீகத்தில் பயணிப்பது கடலினில் பயணிப்பதை போன்றது.



இந்த சிந்தனையுடன், 

மனிதர்களுக்கும் - இறைக் கோட்பாட்டிற்குமான தொடர்புகளை அணுகுவோம்.

சில மனிதர்கள் கடலின் கரையில் நின்று கடலின் அழகினை ஆரவாரத்துடன் கண்டு மகிழ்வர்.


அவர்களைப்  பொருத்தவரை, மதம் என்பது ஆரவாரத்துடன் இணைந்த ஒன்றாகும்.




மத வழிபாட்டையும் ஆரவாரத்தையும் பிரித்து அறிய அவர்களால் முடியாது.




 அமைதியான வழிபாட்டு முறைகளை அர்த்தமற்றவை என்று அவர்கள் ஏற்பர்.


மத வழிபாட்டு நாட்கள் சார்ந்த அரசு விடுமுறை எந்த தேதியில் வருகிறது ? என்று 
வருடத்தின் முதல் நாளில் அலசி ஆராயும் மக்கள் இவர்கள்.

ஆராய்ந்து அது ஞாயிறு அன்று வந்தால் முகம் சுளித்து

திங்கள் என்றால் முகம் மலர்ந்து சிந்திக்கும் சாமானிய மக்கள் இவர்கள்.

இதுதான் பெரும்பான்மையான கூட்டம்.

இது குறையாது

இது நிறையாது

நாத்திகவாதிகள், கடவுள் நம்பிக்கையாளர்களை கண்டு கைதட்டி சிரிக்க இவர்கள் காரணமாக இருப்பர்.

தங்களது கோட்பாட்டிற்கு எதிராக யாரேனும் சிந்தித்தால், செயல்பட்டால், உடனே அதனை எதிர்த்து மதத்தினை காக்க போர்க்கொடி தூக்கும் மனப்பக்குவம் இவர்களுக்குண்டு.

வேறு ஒரு குழுமமும் மனிதர்களுள் உண்டு.

இவர்கள் கரையை விட்டு அகன்ற ஆழமான கடலில் வெகுதூரம் பயணித்து அதன் பின்னர் கரைக்கு மீண்டு வரும் மக்களைப்  போன்றவர்கள்.

இவர்களுக்கு இறைக் கோட்பாட்டின் ஆழம் ஓரளவிற்கு நன்றாகவே புரியும்.


மதக்  காழ்ப்புணர்வு இவர்கள் உள்ளத்தில் அமையப்பெறாது.

அனைத்து மக்களையும் அனைத்து வாழும்  உள்ளம் இவர்களுக்குண்டு

மேலும் ஒரு குழுமமும்  மனிதர்களுள் உள்ளது

இவர்கள்தாம் பெரியவர்கள் , ஞானிகள் , சூஃபிகள் (SUFI) -  இவர்கள் ஆன்மீகத்தின் ஆழ்  கடலில் மட்டுமே இருப்பார்கள்

கடலின் கரையை என்றுமே அணுக மாட்டார்கள்


இவர்களுக்கு சுயநலம் என்று  ஏதும் இருக்காது

சுயம் என்பதை மறுத்த மறந்த மக்கள்

இவர்களைக் காண்பது அரிது

மக்களிடையே வாழும் நிலையிலேயே மறைந்துவிடக்கூடிய திறன் இவர்களுக்கு உள்ளது.

இவர்களைப்போல அனைவரும் ஆக முடியாது

வள்ளலார் இந்த மெல்லிய குழுமத்தை சார்ந்தவர்

எழில்: திருவருட்பாவில் எத்தனை பகுதிகள் உள்ளன ?

தமிழறிஞர்: திருமுறைகள் என்று காணுகையில் ஆறு திருமுறைகள் உள்ளன.

அறியாள்: தமிழ் மக்களுக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை கொடுத்த வள்ளலாரை அவர் காலத்து மக்கள் மகிழ்வாக வைத்தார்களா ?

மலர்: வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றினை ஆழ்ந்து படியுங்கள் , உங்களுக்கு அதில் நிறைய செய்திகள் உள்ளன. இது அவரின் சொற்களில் காணப்படும் அறிவியல் சிந்தனை பற்றிய ஆய்வு மட்டுமே.